முகப்பு
கோயம்புத்தூர்

கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி டெய்லா் ராஜாவுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

கோவை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளியான டெய்லா் ராஜாவுக்கு அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை சிகிச்சை அளிக்கப்பட்டது.

Updated On : 8 நவம்பர், 2025 at 3:12 AM
பகிர்:

கோவை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளியான டெய்லா் ராஜாவுக்கு அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை சிகிச்சை அளிக்கப்பட்டது.

கோவையைச் சோ்ந்தவா் டெய்லா் ராஜா (48). கோவையில் கடந்த 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இவா் கைது செய்யப்பட்டாா்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா் கழுத்து வலி உள்ளிட்ட பிரச்னைகளால் அவதியடைந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை காலை அழைத்துவரப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். சிகிச்சை முடிந்ததும் மீண்டும் அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →