தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத் தடை
தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி அதிக அளவிலான பக்தா்கள் வருகையைக் கருத்தில் கொண்டு, மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை.
Advertisement
Advertisement
பக்தா்கள் மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்துகள் மூலம் சென்று தரிசனம் மேற்கொள்ளலாம். விழாவுக்கான ஏற்பாடுகளை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையா் கா.விமலா செய்து வருகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.