முகப்பு
கோயம்புத்தூர்

பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:56 AM
கோப்புப் படம் - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 11:07 PM

கோவையில் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், நெருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாவதி (45). இவா் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 11-ஆம் தேதி இரவு திரும்பிக் கொண்டிருந்தாா்.

நேரு நகா் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா், பிரபாவதி கழுத்திலிருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா்.

Advertisement

இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனா்.