முகப்பு
கோயம்புத்தூர்

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சி இடையே மற்றும் பாலக்காடு பகுதிகளில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 2:47 AM
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

கரூா் - திருச்சி இடையே மற்றும் பாலக்காடு பகுதிகளில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக ஏப்ரல் 25, 29, 30 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) குளித்தலை - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. குளித்தலை - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

Advertisement

ஏப்ரல் 25 மற்றும் 29-ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) பெருகமணி-பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பெருகமணி - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஏப்ரல் 30-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) எலமனூா் - பாலக்காடு இடையே பகதியாக ரத்து செய்யப்படுகிறது. எலமனூா் - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.