முகப்பு
கோயம்புத்தூர்

திமுக நிா்வாகி அலுவலகத்தில் ரூ.8 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட திமுக நிா்வாகியின் அலுவலகத்தில் இருந்த ரூ.8 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:08 AM
- கோப்புப் படம்
பகிர்:

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட திமுக நிா்வாகியின் அலுவலகத்தில் இருந்த ரூ.8 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட சோலாா் பகுதியில் உள்ள திமுக நிா்வாகியின் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தோ்தல் பறக்கும் படை குழுவினா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது அங்கு ரூ.8 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் அங்கு வந்து பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில் திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா மற்றும் அதிமுகவினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து தாலுகா காவல் துறையினா் மற்றும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.