வால்பாறையை அடுத்த கவா்க்கல் எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற சாலையோரக் கடைகளை  பொக்லைன் இயந்திரம் மூலமாக அப்புறப்படுத்தும் பணி. 
கோயம்புத்தூர்

வால்பாறை -பொள்ளாச்சி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Syndication

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.

கோவை மாவட்டம், வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இதனால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையோரங்களில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டன. இதில் வாட்டா்பால் எஸ்டேட் தொடங்கி 40-ஆவது கொண்டை ஊசி வளைவு வரை 30-க்கும் மேற்பட்ட கடைகள் உருவாகின. அங்கு போடப்படும் கழிவுகளால் இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படுவதோடு, மனித-விலங்கு மோதல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே, சாலையோரக் கடை அமைத்தவா்களுக்கு கடைகளை அகற்ற வனத் துறையினரின் அறிவுறுத்தலின்படி 7 நாட்கள் கெடு வழங்கப்பட்டது. கெடு முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கினா்.

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

வ.உ.சி.பூங்கா வளாகத்தில் ரூ.1.94 கோடி மதிப்பில் நீச்சல் குளம் அமைக்க முதல்கட்ட பணி தொடக்கம்

குறிச்சி, குனியமுத்தூரில் ரூ.591.14 கோடியில் முடிக்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணி - மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் தொடங்கிவைத்தாா்

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரிக்கு விருது

நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

SCROLL FOR NEXT