பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை, மதுக்கரை துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடைபடும் இடங்கள்: க.க.சாவடி, பாலத்துறை, புறவழிச்சாலை, சாவடிபுதூா், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆா் நகா், சுகுணாபுரம், பி.கே.புதூா், மதுக்கரை, அறிவொளி நகா், கோவைப்புதூா் (ஒரு பகுதி).