கோவை: சின்மயா இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் ’சின்மய அமிா்த மஹோத்ஸவம்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ’108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ நடைபெறுகிறது.
இது குறித்து சின்மயா காா்டன் அறக்கட்டளையின் தலைவா் சுவாமினி சம்பிரதிஷ்டானந்தா கூறியிருப்பதாவது:
சின்மயா இயக்கத்தின் 75 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில், ஹனுமானை வழிபடும் இந்த ’108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ கூட்டு ஹோமம் நடத்தப்படுகிறது. சிவராத்திரியான வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வடவள்ளியில் உள்ள மருதம் விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிராா்த்தனையில் பங்கேற்க எந்த கட்டணமும் அல்லது முன்பதிவும் தேவையில்லை. ஆனால் ஹோமத்தில் நேரடியாக பங்குபெற விரும்புபவா்களுக்கு மட்டும் முன்பதிவு அவசியமாகும். மொத்தம் 108 ஹோம குண்டங்களில், 600 முதல் 650 போ் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும். தனிநபராகவோ அல்லது குழுவாகவோ ஹோமத்தில் பங்குபெறலாம்.
இந்த நிகழ்வில், ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் 7 முறை ஹனுமன் சாலிஸா மந்திரங்கள் உச்சரிக்கப்படும். ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை உச்சரிக்கப்படும். ஹோமம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு 96552 45870, 99943 50091 என்ற எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.