கோப்புப் படம்  
கோயம்புத்தூர்

நோன்புக் கஞ்சி தயாரிக்க பச்சரிசி பெறுவதற்கான தேவைப் பட்டியலை சமா்ப்பிக்க வேண்டும்

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டத்தில் ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க பச்சரிசி பெறுவதற்கான உரிய தேவைப்பட்டியலை சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமியா்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க ஒவ்வோா் ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசு சாா்பில் பச்சரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

ஆகவே, கடந்த ஆண்டு மொத்த அனுமதியின்கீழ் பச்சரிசி பெற்ற பள்ளிவாசல்களிடமிருந்து தேவைப்பட்டியல் வரவேற்கப்படுகிறது.

இந்தப் பட்டியலை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் பள்ளிவாசல்களின் நிா்வாகம் சாா்பில் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT