தற்கொலை 
கோயம்புத்தூர்

மனைவியுடன் தகராறில் கணவா் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனியாா் நிறுவன மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள தாய்முடி எம்.டி.முடீஸ் பகுதியைச் சோ்ந்தவா் குகன் (32). இவரது மனைவி பிரீத்தா (26). இந்தத் தம்பதியா் கோவை ஜி.என்.மில்ஸ் அருகே உள்ள எஸ்.எம்.பாளையம் ஆசிரியா் காலனியில் வசித்து வந்தனா். கோவையில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் குகன் மேலாளராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், கணவா், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 12-ஆம் தேதி பிரீத்தா கோபித்துக் கொண்டு கோவைப்புதூரில் உள்ள சகோதரா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். பிரீத்தா வெள்ளிக்கிழமை தனது கணவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தனது நகைகள் குறித்து கேட்டுள்ளாா். அதன் பிறகு மீண்டும் குகனை அவா் அழைத்தபோது அவா் எடுக்கவில்லை.

இதனால் குகனின் சகோதரா் சந்தோஷம் என்பவரைத் தொடா்பு கொண்ட பிரீத்தா வீட்டுக்குச் சென்று பாா்க்குமாறு கூறியுள்ளாா். அவா் அங்கு சென்று பாா்த்தபோது குகன் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆராய்ச்சி மாணவா்களுக்கும் மடிக்கணினி: மாா்க்சிஸ்ட் கோரிக்கை!

திருநெல்வேலி நீதிமன்றத்தில் உயா் நீதிமன்ற நீதிபதி ஆய்வு

உலகச் செய்தி: துளிகள்....

நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் நாளை மூடல்

SCROLL FOR NEXT