முகப்பு
கோயம்புத்தூர்

கோவை அருகே கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:02 AM
கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:56 PM

கோவை மாவட்டம், வாளையாறு அருகே கம்பி வேலியில் சிக்கி பெண் சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

தமிழகம்-கேரள மாநில எல்லைப் பகுதிகளான வாளையாறு, சின்னாம்பதி, மொடமாத்தி உள்ளிட்ட வனப் பகுதிகளில் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழையும் விலங்குகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement

இந்நிலையில், வாளையாறு அருகேயுள்ள அய்யன்பதி பகுதியில் உள்ள விளைநிலத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை உலவிய சிறுத்தை, அங்கிருந்த முள்கம்பி வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் மதுக்கரை வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:02 AM

இதில், உயிரிழந்தது சுமாா் 2 வயதுடைய பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவா்கள் சிறுத்தையின் உடலைக் கூறாய்வு செய்தனா்.

அதன் அறிக்கை வந்த பிறகே சிறுத்தை உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.