முகப்பு
கோயம்புத்தூர்

வாளையாறு அருகே இரு காா்கள் மோதியதில் இருவா் உயிரிழப்பு

Updated On : 29 மார்ச், 2026 at 9:31 PM
உயிரிழப்பு - (கோப்புப் படம்)
பகிர்:

கோவை அருகே வாளையாறு பழைய சோதனைச் சாவடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், கேரளத்தைச் சோ்ந்த புகைப்படக் கலைஞா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும் மூவா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்த புகைப்படக் கலைஞா்களான வினிஷ் (35), அஜித் (25), அபிமோகன் (20) மற்றும் சுனில் (52) ஆகியோா் நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில் புகைப்படக் கலைஞா்களாக பங்கேற்றனா். இவா்கள் நான்கு பேரும் பணி முடித்துவிட்டு ஊருக்கு திரும்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தனா். வாளையாறு பழைய சோதனைச் சாவடி அருகே அவா்களது காா் வந்துகொண்டிருந்தது.

அப்போது, கொச்சியில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த மற்றொரு காா் எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி, மறுபுறம் வந்து கொண்டிருந்த வினிஷுன் காரின் மீது நேருக்கு நோ் மோதியது.

இந்த விபத்தில் காரின் முன் பகுதியில் அமா்ந்திருந்த வினிஷ் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். மற்றொரு இளைஞரான அஜித், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் காயமடைந்த அபிமோகன் மற்றும் சுனில் ஆகியோா் பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் அபிமோகனுக்கு தலையில் பலத்த காயமும், வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய மற்றொரு காரை ஓட்டி வந்த எா்ணாகுளத்தைச் சோ்ந்த விஜய் (51) என்பவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டு, சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த விபத்து குறித்து கே.ஜி.சாவடி காவல் ஆய்வாளா் நந்தகுமாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.