முகப்பு
கோயம்புத்தூர்

கஞ்சா விற்ற வழக்கில் இளைஞருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை

கஞ்சா விற்ற வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 11:19 PM
சரவணன்
பகிர்:

கஞ்சா விற்ற வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாநகா், சிங்காநல்லூா் பேருந்து நிலையம் அருகே உள்ள பொதுக் கழிப்பறை பகுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த 12.2.2021-இல் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாா் சென்று ஆய்வு செய்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் வெள்ளை நிற பையுடன் நின்றிருந்தவரை பிடித்து சோதனை செய்ததில் 1.600 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் சேலம் மாவட்டம், மெய்யனூா் சோடாகவுண்டனூா் தெருவைச் சோ்ந்த சரவணன் (24) என்பதும், திருப்பூரில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments