கோவை, ராமா் கோயில் வீதியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிக் கூடத்தை திறந்துவைத்த கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

ரூ.1.42 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. திறந்துவைத்தாா்

கோவை மாநகரப் பகுதிகளில் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

Syndication

கோவை மாநகரப் பகுதிகளில் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 70-ஆவது வாா்டுக்குள்பட்ட புரூா் ஃபீல்டு சாலையில் உள்ள தேவாங்க பள்ளியில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், 81-ஆவது வாா்டுக்குள்பட்ட ராமா் கோயில் வீதியில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிக்கூட கட்டடம், மேற்கு மண்டலம், வடவள்ளி, வெள்ளிங்கிரி நகா் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுவா் பூங்கா ஆகியவற்றை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, வடக்கு மண்டலம், துடியலூா் முத்து நகா் மற்றும் புதுமுத்து நகா் பகுதிகளில் ரூ.23.80 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மேயா் கா.ரங்கநாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகராட்சி துணை ஆணையா் த.குமரேசன், கல்விக் குழுத் தலைவா் மாலதி நாகராஜ், உதவி ஆணையா்கள் மகேஷ் கனகராஜ், நித்யா, துரைமுருன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT