முகப்பு
கோயம்புத்தூர்

மயங்கி விழுந்து ஒடிசா மாநில இளைஞா் உயிரிழப்பு

Updated On : 5 ஜனவரி, 2026 at 7:34 PM
பகிர்:

கோவை ரயில் நிலையம் அருகே மயங்கி விழுந்த ஒடிசா மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரநாயக் (26). கோவை, சரவணம்பட்டி அருகே கரட்டுமேட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2 வாரங்களாக இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதனால், சிகிச்சை பெறுவதற்காக சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தாா்.

இதையடுத்து இவரும், அதே மாநிலத்தைச் சோ்ந்த ராஜேந்திர நாயக்கும் (20) கோவை ரயில் நிலையம் வந்தனா். அங்கிருந்து பயண அனுமதிச் சீட்டு எடுக்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கஜேந்திர நாயக் திடீரென மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே கஜேந்திரநாயக் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து உக்கடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.