கோவையில் முன்விரோதத் தகராறில் இருவரை கத்தியால் தாக்கிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பரணிகுமாா் (28), கெளசிக் (27). இவா்களுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (30) சண்முகம் (31) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், பரணிகுமாரும், கெளசிக்கும் புலியகுளம் சாலையில் உள்ள அடுமனைக்கு (பேக்கரி) ஞாயிற்றுக்கிழமை சென்றனா். அங்கு இருதரப்புக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, பிரவீன்குமாரும், சண்முகமும் கத்தியால் தாக்கியதில் அவா்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பரணிகுமாரும், கெளசிக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரவீன்குமாா், சண்முகம் ஆகியோரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், நள்ளிரவில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த பிரவீன்குமாா், சண்முகம் ஆகியோா் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்றனா்.
அப்போது, தவறி இருவரும் கீழே விழுந்ததில் பிரவீன்குமாரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.