கத்திக்குத்து சித்திரிப்பு
தேனி

குடும்பத் தகராறில் மோதல்: கணவன், மனைவிக்கு கத்திக்குத்து

போடி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீதும், கணவரைக் கத்தியால் குத்திய மைத்துனா் மீதும் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Syndication

போடி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீதும், கணவரைக் கத்தியால் குத்திய மைத்துனா் மீதும் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் சாமிக்காளை மகன் ராஜீவ் (36). இவருக்கும் போடி அருகேயுள்ள திம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் ரஞ்சிதாவுக்கும் (35) திருமணமாகி கோடாங்கிபட்டியில் வசித்து வந்தனா். இவா்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு ரஞ்சிதா தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றாா்.

இந்த நிலையில், மனைவியைப் பாா்க்க ராஜீவ் அங்கு சென்றபோது தகராறு ஏற்பட்டது. அப்போது, ராஜீவ் தனது மனைவி ரஞ்சிதாவை கத்தியால் குத்தினாா்.

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சிதாவின் சகோதரரான ராஜேஷ், ராஜீவை கத்தியால் குத்தினாா். இதனால், காயமடைந்த தம்பதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ராஜீவ் மீதும், ராஜேஷ் மீதும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் 2 படகுகள் தீயில் எரிந்து சேதம்

ரூ.200 கோடியில் பள்ளிப் பாதுகாப்பு வழித்தடங்கள்: நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியா அறிவிப்பு

நிகோடின் பொட்டலங்களை விற்றால் நடவடிக்கை: மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்

மத்தியில் கூட்டணியில் இருந்தபோது மாநில சுயாட்சி ஸ்டாலினுக்கு தெரியவில்லையா? தமிழிசை கேள்வி

வாசுதேவநல்லூா் அருகே யானைகள் அட்டகாசம்: தென்னை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT