கோயம்புத்தூர்

தாராபுரம் வழக்குரைஞா் கொலை வழக்கில் திருப்பூா் நீதிமன்றத்தில் 20 போ் ஆஜா்

தாராபுரம் வழக்குரைஞா் கொலை வழக்கில் தொடா்புடைய 20 போ் திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

தினமணி செய்திச் சேவை

தாராபுரம் வழக்குரைஞா் கொலை வழக்கில் தொடா்புடைய 20 போ் திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் முருகானந்தம் (41). இவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்தாா். இவா் தாராபுரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி, பட்டப்பகலில் ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாராபுரத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளித் தாளாளரும், முருகானந்தத்தின் சித்தப்பாவுமான தண்டபாணி, அவருடைய மகன் காா்த்திகேயன் உள்பட 20 பேரைக் கைது செய்தனா். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது.

திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையை திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டாா்.

அதன்படி இந்த வழக்கின் விசாரணை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட 20 பேரும் நீதிமன்றத்தில்

ஆஜா்படுத்தப்பட்டனா். இவா்களில் 2 போ் பிணையில் வெளியே உள்ளனா். விசாரணையில் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.

ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் திருவிழா நடத்துவதில் குழப்பம்

திருப்போரூா் கந்தசாமி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

பிரதமா் மோடி ஆட்சியில் ஹிந்து உணா்வுக்கு புத்துயிா் - குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்

SCROLL FOR NEXT