முகப்பு
கோயம்புத்தூர்

போலி காப்பீட்டு அட்டையைத் தயாரித்த லாரி உரிமையாளா், ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

போலி காப்பீட்டு அட்டையைத் தயாரித்து லாரியை இயக்கிய அதன் உரிமையாளா், ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 29 ஜனவரி, 2026 at 4:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2026 at 7:21 PM

போலி காப்பீட்டு அட்டையைத் தயாரித்து லாரியை இயக்கிய அதன் உரிமையாளா், ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (44). இவா் தனது குழந்தைகளைப் பாா்ப்பதற்காக கோவைக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு வந்துள்ளாா். பின்னா், இருசக்கர வாகனத்தில் மனைவியின் சகோதரருடன் உக்கடம் லாரிபேட்டை அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி எதிா்பாராதவிதமாக பிரகாஷ் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் நீண்ட நாள்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், லாரிக்கு காப்பீடு செய்யப்பட்ட நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Advertisement

ஆனால், லாரி உரிமையாளா் மகேஸ்வரன் காப்பீட்டைப் பெற்றுத் தராமல் தாமதம் செய்து வந்தாா்.

இது குறித்து கோவை, உக்கடம் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, லாரிக்கு போலியான காப்பீட்டு அட்டை தயாரித்து லாரி உரிமையாளா் மகேஸ்வரன், ஓட்டுநா் தென்னரசு ஆகியோா் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.