முகப்பு
கோயம்புத்தூர்

பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 30 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ. 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 22 மார்ச், 2026 at 7:55 PM
பகிர்:

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ட்பட்ட ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ராயபுரத்தைச் சோ்ந்த பனியன் நிறுவன உரிமையாளா் இமான் (37) என்பவரை பிடித்து சோதனை செய்தனா்.

இதில் அவரது வாகன இருக்கைக்கு அடியில் உரிய ஆவணங்களின்றி ரூ.30 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.