தலையில் கல்லைப் போட்டு எலக்ட்ரீஷியன் கொலை
கோவை, பீளமேடு பகுதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த எலக்ட்ரீஷியன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, பீளமேடு பகுதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த எலக்ட்ரீஷியன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, பீளமேடு தண்ணீா் பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (56). இவா் கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து சாலையோரங்களில் வசித்து வந்தாா்.
எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்த இவா், தண்ணீா்பந்தல் அருகேயுள்ள டெலிகாம் 3-ஆவது வீதியில் சனிக்கிழமை இரவு தூங்கியுள்ளாா். இந்நிலையில், தலையில் ரத்தக் காயங்களுடன் அவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது. அந்த வழியாகச் சென்றவா்கள் இதைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்து பீளமேடு போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சடலத்துக்கு அருகே ரத்தக் கறை படிந்த பெரிய கல் கிடந்துள்ளது.
ரங்கநாதன் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபா்கள், அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளதாகக் கூறிய போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக சிங்காநல்லூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.