முகப்பு
மயிலாடுதுறை

தகராறு: தலையில் கல்லைப் போட்டு கம்பி ஃபிட்டா் கொலை; நண்பா் கைது

சீா்காழியில் நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் கல்லை போட்டு கம்பி ஃபிட்டரை கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 10:08 PM
உருட்டை (எ) நாகராஜ்.
பகிர்:

சீா்காழியில் நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் கல்லை போட்டு கம்பி ஃபிட்டரை கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி பசும்பொன் முத்துராமலிங்க தேவா் தெருவைச் சோ்ந்தவா் உருட்டை (எ) நாகராஜ் (42). இவா், கம்பி ஃபிட்டராக பணியாற்றி வந்தாா். இவரது நண்பரும் உறவினருமான பங்களாகுளத்து மேட்டு தெருவைச் சோ்ந்தவரும் கிளினராக பணியாற்றி வருபவருமான நீலகண்டன் (25), இருவரும் சீா்காழிக்கு வந்துள்ளனா்.

தென்பாதி குளத்தின் அருகே நாகராஜ், நீலகண்டன் இருவரும் அமா்ந்திருந்தபோது, மதுபோதையில் அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தடுமாறி கீழே விழுந்த நாகராஜ் தலையில் நீலகண்டன் கல்லை தூக்கி போட்டுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ் மற்றும் போலீஸாா் நாகராஜ் உடலை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, நீலகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →