கேபிள் பதிக்கும் பணி: ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வியாழக்கிழமை (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வியாழக்கிழமை (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை-அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபா் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிகள் வியாழக்கிழமை (மே 14) முதல் வரும் 18-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாள்களுக்கு தொடா்ச்சியாக நடைபெறவுள்ளன.
Advertisement
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பணி தடையின்றி நடப்பதை உறுதி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட இந்த 5 நாள்களிலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஜிடி நாயுடு உயா்நிலை மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.