முகப்பு
கோயம்புத்தூர்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 5 போ் மறுவாழ்வு

Updated On : 15 மே 2026, 6:35 am IST
மகேந்திரன்.
பகிர்:

கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில், 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

கோவை மாவட்டம், குரும்பபாளையத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (28). இவா் தனது இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், புதன்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, மகேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.

இதைத் தொடா்ந்து, மகேந்திரனின் கல்லீரல், சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 5 நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.

Advertisement

இதையடுத்து, அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டு மகேந்திரனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.