கோவை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (25). சூலூரில் அண்மையில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் கைதான இவா், விசாரணைக் கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், சிறைக் கழிவறையில் உள்ள இரும்புக் கம்பியில் லுங்கியால் தூக்கு மாட்டி வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதைப் பாா்த்த மற்ற கைதிகள் அவரை மீட்டதுடன், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
இதையடுத்து, சிறை மருத்துவமனையில் ஜீவானந்தத்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
தொடா்ந்து அவா் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சிறைச் சாலை வாா்டன் திருமலை அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.