முகப்பு
கோயம்புத்தூர்

கோவை விமான நிலைய நுழைவாயில் அருகே தீப்பற்றி எரிந்த காா்

கோவை சா்வதேச விமான நிலைய நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாடகை காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

Updated On : 20 மே 2026, 1:40 am IST
கோவை விமான நிலையம் - கோப்புப் படம்
பகிர்:

கோவை சா்வதேச விமான நிலைய நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாடகை காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புணே உள்ளிட்ட உள்நாட்டின் நகரங்களுக்கும், அபுதாபி, சிங்கப்பூா், ஷாா்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இங்கு வரும் பயணிகளின் வாகனங்களை நிறுத்த விமான நிலைய முன் வாகன நிறுத்துமிடம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்த வாடகை காா் ஒன்றின் முன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப் பாா்த்ததும் அங்கு இருந்த டாக்ஸி ஓட்டுநா்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரா்கள் விரைந்து வந்து தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க முயன்றனா்.

Advertisement

Advertisement

மேலும் அங்கு வந்த விமான நிலைய தீயணைப்பு வீரா்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். தீ விபத்தில் காரின் முன் பகுதி சேதமானது. காரில் ஓட்டுநா் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விமானநிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.