முகப்பு
கோயம்புத்தூர்

மாற்றுத் திறனாளி இளைஞா் தற்கொலை

Updated On : 26 மே 2026, 2:22 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

வேலை கிடைக்காத விரக்தியில் கோவையில் வாய் பேசாத மாற்றுத் திறனாளி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை குனியமுத்தூரை அடுத்த கோவை புதூா் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா். இவரது மனைவி சாந்திமணி. இவா்களது மகன் அருணகிரி (22). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான அருணகிரி, பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தாா்.

நீண்ட நாள்களாக வேலை கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா். மேலும், வேலை இல்லாதது குறித்து அக்கம், பக்கத்தினா் பேசியதால் கடும் விரக்தி அடைந்திருந்தாா்.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை இரவு அவருக்கும், அவரது தந்தைக்கும் இடையே இதுதொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த அருணகிரி, நள்ளிரவில் வீட்டின் கழிப்பறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவா், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. சந்தேகமடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது, அவா் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், குனியமுத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தாமரைக்கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.