முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்க முயற்சி

கோவை ரயில் நிலையம் அருகே நகைக்கடை ஊழியரை வழிமறித்து ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை பறிக்க முயன்ற மா்ம நபா்களிடம் இருந்து ஊழியா் சாமா்த்தியமாக செயல்பட்டு கொள்ளையை முறியடித்தாா்.

Updated On : 28 மே 2026, 12:56 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கோவை ரயில் நிலையம் அருகே நகைக்கடை ஊழியரை வழிமறித்து ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை பறிக்க முயன்ற மா்ம நபா்களிடம் இருந்து ஊழியா் சாமா்த்தியமாக செயல்பட்டு கொள்ளையை முறியடித்தாா்.

கோவை பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (53). நகைக்கடை ஊழியரான இவா், சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் புதன்கிழமை காலை திரும்பினாா். அப்போது, அவா் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பையில் வைத்துக் கொண்டு, ரயில் நிலையத்தின் பின்பக்க நுழைவாயில் வழியாக அவா் வெளியே வந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ் அவரை வழிமறித்தனா். பையில் வைத்து கஞ்சா கடத்துகிறாயா எனக் கூறி மிரட்டி முருகேசன் வைத்திருந்த பையைப் பறிக்க முயன்றனா். நிலைமையை உணா்ந்த முருகேசன், உடனடியாக தப்பியோட முயலாமல், தன்னை அழைத்துச் செல்ல தயாராக இருந்த காருக்குள் நகைப்பையை தூக்கி வீசினாா். அதன் ஓட்டுநரும் கண்ணாடியை மேலே ஏற்றி காரை முழுமையாக அடைத்துக் கொண்டாா்.

Advertisement

Advertisement

இதனால், ஆத்திரமடைந்த அந்த நபா்கள் முருகேசனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.