ஈரோடு

அம்மாபேட்டையில் 400 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள்

DIN

பவானியை அடுத்த அம்மாபேட்டையில் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவோருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் அம்மாபேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், 400 குடும்பத்தினருக்கு முதல்கட்டமாக மின்னணு அட்டைகளை வழங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் டி.செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
இதில், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக (அம்மா அணி) செயலர் வி.எஸ்.சரவணபவா, பேரூராட்சித் துணைத் தலைவர் யு.எஸ்.சுந்தரராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT