ஈரோடு

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

DIN

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, ஈரோடு சுற்று வட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 ஈரோடு, சூளை அங்காள பரமேஸ்வரி கோயிலில் அம்மன் நாகலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அசோகபுரம், முல்லை நகர், முத்துலட்சுமி அம்மன் கோயிலில் அம்சவர்ஷினி  அலங்காரத்திலும், கருங்கல்பாளையம் தேவி கருமாரியம்மன் கோயில், எல்லை மாரியம்மன் கோயிலில் துர்கை அம்மன் அலங்காரத்திலும், கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 வெள்ளிக்கிழமை காலை முதலே அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT