ஈரோடு

ஈரோட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு, சூரம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மண்டல பாஜக தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். மாவட்ட  பொதுச் செயலர்கள் குணசேகரன், கலைசெல்வன், தங்கராஜ், கோகுல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் வீடுகள் கட்ட வரைபட அனுமதியும், ஒப்புதலும் பெற கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தும், புதை சாக்கடைத் திட்டத்துக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி அப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும், சென்னிமலை சாலையில் உள்ள அரசு மதுக் கடையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மாநில வழக்குரைஞர் அணி நிர்வாகி என்.பி.பழனிசாமி, மாநில பிரசார அணிச் செயலர் சரவணன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT