ஈரோடு

சாலை விபத்து: தொழிலாளி சாவு

DIN

பெருந்துறை நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி மீது டிப்பர் லாரி மோதியதில் உயிரிழந்தார். 
பெருந்துறை, சென்னிவலசைச் சேர்ந்தவர் கோபால் (54). முடி திருத்தும் தொழிலாளி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறை காவல் நிலையம் எதிரிலுள்ள சாலையில் வியாழக்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மோதியதில் கோபால் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயோ கோபால் உயிரிழந்தார்.  இதுகுறித்து, பெருந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT