ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதி காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் மூனாஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (47). கொலை வழக்குத் தொடர்பாக கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக கடந்த 14 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடுமையான காய்ச்சல் காரணமாக சுப்பிரமணி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.