ஈரோடு

ஈரோட்டில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்

DIN

ஈரோடு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 235 மனுக்கள் பெறப்பட்டன.
 இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு,  காவல் துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை,  கல்விக் கடன்,  தொழில் கடன்,  குடிநீர் வசதி,  சாலை வசதி உள்ளிட்டவை கோரி 235 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து ஒரு பயனாளிக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
 கூட்டத்தில், தனி துணை ஆட்சியர் பாபு, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT