ஈரோடு

தீயில் கருகி 3 ஏக்கர் கரும்பு சேதம்

DIN

பெருந்துறை அருகே விவசாய நிலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 3 ஏக்கர் கரும்பு எரிந்து சேதமடைந்தது.
பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையம் பேரூராட்சி,  எளையாம்பாளையம்,  மாங்காத் தோட்டத்தைச் சேர்ந்தவர் சீதப்பகவுண்டர்( 70). இவருக்குச் சொந்தமான 6  ஏக்கர் தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.
இந்நிலையில்,  தோட்டத்தில் இருந்த மின் கம்பத்தில் தென்னைமட்டை செவ்வாய்க்கிழமை மாலை  விழுந்தது.  அப்போது  தீ பிடித்து,  காய்ந்த சருகுகள் மீது விழுந்தது. இதில் கரும்பு காட்டில்  மளமளவென தீ பரவியது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள்  சுமார் 2 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர்.
ஆனாலும்,  மூன்று ஏக்கர் பரப்பிலான கரும்பு எரிந்து  சேதமடைந்தாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT