ஈரோடு

பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்  ஈரோட்டில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாக்கிய கபிலன் (எ) சேகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளரான தேசிய பொருளாளர் அம்பேத்ராஜன்,  மாநில ஒருங்கிணைப்பாளர் கோபிநாதன்,  மாநிலப் பொதுச் செயலர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் விரோதப் போக்குடன் பல்வேறு செயல்திட்டங்களை அரங்கேற்றி வரும் பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  
ஒருங்கிணைப்பாளர்கள் செல்வன்,  வினோத்குமார்,  பார்த்திபன், ரகு,  மாவட்ட துணைத் தலைவர் வீரப்பன்,  மாவட்ட பொதுச் செயலர் சென்னியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT