ஈரோடு

மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்

DIN

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்  அவல்பூந்துறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கொழந்தசாமி வரவேற்றார். அறச்சலூர் கிளைத் தலைவர் சூர்யாவடிவேல், செயலாளர் இளங்கோ ஆகியேர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில், மண்பாண்டத் தொழில்களுக்கு ஏரி, குளங்களில் களிமண் எடுக்க அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 தொடர்ந்து, தலைவர் வெங்கடாசலம் பேசுகையில், அரசு அறிவித்துள்ளபடி ஏரி, குளங்களில் களிமண் எடுக்க அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி கோரிக்கை மனு அளித்து, அனுமதி பெற்று மண்பாண்ட தொழில்களுக்கு களிமண்ணைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
 அறச்சலூர் கிளை பொருளாளர் கனகராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT