ஈரோடு

யானை தாக்கி பூசாரி சாவு

DIN

தாளவாடி அருகே யானை தாக்கியதில் பூசாரி உயிரிழந்தார்.    
தாளவாடி புலிகள் காப்பகம், அருள்வாடியைச் சேர்ந்தவர் விவசாயி நஞ்சுண்டய்யா (65). கோயில் பூசாரி. இவரது  தோட்டத்தில் ராகி சாகுபடி செய்துள்ளார். வனத்தில் இருந்து வரும் யானைகள், காட்டுப் பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதால் நஞ்சுண்டய்யா புதன்கிழமை காவலுக்குச் சென்றுள்ளார். அப்போது, தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த யானைகளை அவர் மேளம் அடித்து விரடியுள்ளார். அதில், ஒரு யானை அவரைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  
 இதுகுறித்து தகவலின்பேரில், நஞ்சுண்டய்யாவின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT