ஈரோடு

குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு நாடகம்

DIN

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் விழா ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.  ஈரோடு, மணல்மேடு வீதியில் உள்ள தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி கலந்துகொண்டு நேருவின் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். வட்டாரத் தலைவர்கள் முத்துகுமார்,  கோபாலகிருஷ்ணன்,  சிவகுமார்,  நடராஜ், மாநில பொறுப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் திருப்பூர் மரியாலயா தொண்டு நிறுவனத்தின் சார்பில் குழந்தைகள் மீதான வன்முறைகள், சுரண்டல்கள் தடுத்தல் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT