தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் ஜெ.அஸ்லாம் பாஷா ஈரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) வருகிறார்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத் துறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவகர் இல்லத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட சிறுபான்மை துறைத் தலைவர் சுரேஷ் தலைமை வகிக்கவுள்ளார். சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.பி.ரவி முன்னிலை வகிக்கிறார்.
சிறுபான்மை துறையைச் சார்ந்த நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், துணை அமைப்புகளைச் சார்ந்தவர்கள், மண்டலத் தலைவர்கள், மண்டல நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இத்தகவலை மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவர் கே.என்.பாஷா தெரிவித்துள்ளார்.