விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் சாதனை புரிந்த மற்றும் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு சார்பில் 2018-ஆம் ஆண்டுக்கான துரோணாச்சாரியார் விருது, ராஷ்டிரிய கேல் புரட்சகான் புரஸ்கார் விருது, அர்ஜூனா விருது, தயான்சந்த் விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இவ்விருதை பெற தகுதியுடையவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.