முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் ஈரோடு மாவட்ட  மூத்தோர் கிரிக்கெட்  அணிக்கான வீரர்கள் தேர்வு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறுகிறது . 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் ஈரோடு மாவட்ட  மூத்தோர் கிரிக்கெட்  அணிக்கான வீரர்கள் தேர்வு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறுகிறது . 
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கிடையேயான மூத்தோர்களுக்கான 20 ஓவர் எஸ்.எஸ்.ராஜன் கோப்பை லீக் சுற்று கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை திருப்பூரில் நடைபெறவுள்ளது. 
இப்போட்டியில் கலந்துகொள்ளும் ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்களுக்கான தேர்வு வரும் பிப்ரவரி25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணியளவில் மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் வருமாறு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜாபர்ஆசிக்அலி தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →