ஈரோடு

மொடக்குறிச்சியில் ரூ. 1.20 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

DIN

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ. 1.20 கோடி மதிப்பிலான புதிய கட்டடப் பணிகளை மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி தொடக்கிவைத்தார். 
மொடக்குறிச்சி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கனகபுரம், எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுய உதவிக்குழு கட்டடம் கட்டுவதற்காக ரூ. 1.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தார். 
மொடக்குறிச்சி ஒன்றியச் செயலர் ஆர்.பி.கதிர்வேல், ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் கணபதி, ஆவின் இயக்குநர் அசோக், மொடக்குறிச்சி ஊராட்சி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மயில் (எ) சுப்பிரமணி,  ஏ.பி.டெக்ஸ் தலைவர் பூவைத் தமிழன், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசுப்பிமணியம்,  எழுமாத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

SCROLL FOR NEXT