ஈரோடு

மர்மக் காய்ச்சல்: பெண் குழந்தை சாவு

DIN

அந்தியூர் அருகே மர்மக் காய்ச்சல் பாதிப்பால் 9 மாதமே ஆன பெண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. 
அந்தியூரை அடுத்த ஒலகடம், கொளந்தபாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து - தமிழரசி தம்பதி. இவர்களின் இரண்டாவது மகள் நைனிகா, பிறந்து 9 மாதங்களே ஆகின்றன. கடந்த 3 நாள்களாக சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நைனிகாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆயினும், காய்ச்சல் குணமாகவில்லை. இந்நிலையில், வீட்டிலிருந்த நைனிகாவுக்கு  திடீரென ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றபோது, சிகிச்சை பலனின்றி நைனிகா உயிரிழந்தது. 
இவர்களின் மூத்த மகள் இந்துமதிக்கும் (3) காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மர்மக்காய்ச்சல் பாதிப்பால் 9 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT