ஈரோடு

பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

DIN

சத்தியமங்கலம் பகுதியில் தீபாவளி நேரத்தில் நிகழும்  தீ விபத்தில் சிக்குபவர்களையும், மழைக் காலத்தில் பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் நடைபெற்றது.
வெள்ளக் காலத்தில் உயரமான கட்டடங்களில் சிக்கிய மாணவர்களை ஏணி வாயிலாகவும், கயிறு வாயிலாகவும் பாதுகாப்பாக இறக்குவது, அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதியில் கேஸ் அடுப்பில் தீப்பிடித்தல், குடிசையில் ஏற்பட்ட தீ, ஆயில் தீப்பிடிப்பு போன்ற பல்வேறு விதமான தீ விபத்துகளை எப்படி அணைப்பது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர்.  சத்தியமங்கலம் தீயணைப்பு அலுவலர் விஜயகுமார், போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரன், தலைமைக் காவலர் யேசுராஜ் ஆகியோர் தலைமையில் வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT