முகப்பு
ஈரோடு

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் இலக்கிய மன்ற விழா, அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:05 AM
பகிர்:

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் இலக்கிய மன்ற விழா, அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, செங்குந்தர் கல்விக் கழக துணைத் தலைவர் ஆர்.எஸ்.நடராஜ முதலியார்  தலைமை  வகித்தார். செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியின் செயலர் எஸ்.சிவானந்தன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பவா.செல்லத்துரை கலந்துகொண்டு "வாழ்விலிருந்து இலக்கியம்' எனும் தலைப்பில் பேசினார். தொடர்ந்து, சென்ற ஆண்டு அரசு பொதுத் தேர்வில் முதல்நிலை பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார். 
பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர்  எஸ்.பி.ஆறுமுகம் வாழ்த்திப் பேசினார். செங்குந்தர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.வேலுமணி வரவேற்றார். உதவித் தலைமையாசிரியர் எஸ்.தெய்வசேனாதிபதி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.