ஈரோடு

நாய் கடித்ததால் பாதிப்பு: தொழிலாளி சாவு

DIN

அந்தியூர் அருகே நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
அந்தியூர் அருகிலுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (48). இவர் கடந்த 10 ஆண்டுகளாக, மூலக்கடை நீரேற்று நிலையத்தில் குடிநீர்த் தொட்டி பராமரிப்பாளராகப் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் இவரை ஒரு நாய் கடித்துள்ளது. அதற்கு உரிய முதலுதவி சிகிச்சை எதையும் இவர் செய்துகொள்ளவில்லை. 
இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் மனித இயல்புகளுக்கு மாறாக, நாய் போல இவர் நடந்துள்ளார். இதைக் கண்ட உறவினர்கள், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்குச் சேர்த்தனர். வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT