ஈரோடு

வாய்க்காலில் மூழ்கி இளைஞர் சாவு

DIN

பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 
ஈரோடு அருகிலுள்ள கருங்கல்பாளையம், கே.எஸ்.நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் தினேஷ் (24). பொறியியல் பட்டதாரியான இவர், கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தனது நண்பர்கள் சிலருடன் பவானி, லட்சுமி நகர் கோணவாய்க்கால் அருகே காலிங்கராயன் வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராமல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட தினேஷ் உயிரிழந்தார். 
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினரும், மீனவர்களும்  தினேஷின் சடலத்தை மீட்டனர். சித்தோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT