ஈரோடு

பெருந்துறை சிப்காட் சாலையை ரூ. 40 லட்சம் மதிப்பில் செப்பனிட பூமிபூஜை

DIN

பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட சின்னவேட்டுவபாளையம் முதல் பெரியவேட்டுவபாளையம் வரை செல்லும் சிப்காட் சாலையை ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் செப்பனிடும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. 
விழாவில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்  பூமிபூஜை செய்து, பணியைத் தொடக்கி வைத்தார்.
இதில், பெருந்துறை வட்டாட்சியர் வீரலட்சுமி,  சிப்காட் திட்ட அலுவலர் சாய்லோகேஷ்,  பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, ஒன்றியச் செயலாளர் விஜயன், ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் அருள்ஜோதி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT