ஈரோடு

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்

DIN

மொடக்குறிச்சி தாலுகா, 46புதூர் ஊராட்சியில் 1,209  கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, கால்நடைத் துறை ஈரோடு மண்டல இணை இயக்குநர் கோபால்சாமி தலைமை வகித்தார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி முகாமைத் தொடக்கிவைத்தார்.
மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.பி.கதிர்வேல், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் கணபதி, 46புதூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கால்நடைத் துறை உதவி இயக்குநர் பழனிசாமி வரவேற்றார். சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி, முகாமைத் தொடக்கிவைத்து, சிறந்த மாடுகளைத் தேர்வு செய்து அதற்கான பரிசுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். மாடு, ஆடு, எருமை, கோழி, நாய் உள்ளிட்ட 1,209 கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.  இதில், ஆவின் துணை மேலாளர் வெங்கடாசலம், கால்நடைத் துறை மருத்துவர்கள் தங்கவேல், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT